கரூர்: தாக்கல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
கரூரில், போர் ஒப்பந்தத்தை மீறி காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேலியர்களை கடந்த வருடம் கடத்திச் சென்றதன் மூலம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டு போரை நிறுத்தினர். 

இதனிடையே போர் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, கரூர் - கோவை சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் முன்பு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பாட்ஷா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சற்றுமுன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேலிய இராணுவத்தின் செயல்பாட்டினை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் காசா மக்களை காப்பாற்ற வேண்டும், பச்சிளம் குழந்தைகளை கொல்லாதே என கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி