மின்சார வாரிய தொழில் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
கரூர் தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63000 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் மின்வாரிய அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். குடும்பத்தை பிரிந்து 400 , 500 கிலோ மீட்டர் தூரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிச்சுமையின் மன அழுத்தத்துடன் பணி மேற்கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மின்சார வாரிய நிர்வாக குழு அனுமதி வழங்கியும் பணி அமர்த்தப்படாமல் நிலுவையில் உள்ள 5499 கேங் மேன்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ராஜா தலைமை வகித்தார். , மண்டல செயலாளர் ரவிச்சந்திரன் மண்டல தலைவர் சிவஞானம் , மாவட்ட செயலாளர் சசிகுமார் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஜெயக்குமார். நாமக்கல் மாவட்ட தலைவர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி