கரூரில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
கரூர், மேட்டுத் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி அலங்காரத்தில் ஆலயம் வலம் வந்த பிறகு ஆலயம் அருகே உள்ள தேர் மீது கொலுவிருக்க செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து சென்ற தேரோட்டம் ஆலயம் அருகே வந்தடைந்தது.
சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.