செட்டிகரை- பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது. ரூ. 760 பறிமுதல்.

66பார்த்தது
செட்டி கரையில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூ. 760 பறிமுதல்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் டிசம்பர் 22ஆம் தேதி மாலை 7 மணி அளவில், செட்டிகரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.


அப்போது, அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் அடுத்த மணல்மேடு அருகே உள்ள கொடையூர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம், செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி, செட்டிபாளையம்
குடிதெருவை சேர்ந்த பொன்னுசாமி, செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகர்,
அப்பிபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும்,
ரூ. 760யும் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி