சின்ன ஆண்டாங் கோவில் அருகே நடந்து சென்ற நபர் மீது டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் வயது 58. இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், கரூர்- சின்னாண்டாங் கோவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் செயல்படும் தனியார் ஸ்டீல் கம்பெனி அருகே சென்றபோது, கரூரைச் சேர்ந்த நவ்ஷாத் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற தேவராஜ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக தேவராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நவ்ஷாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.