புகலூர்: வெறி நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

72பார்த்தது
புகலூரில் வெறி நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. புகலூர் பாலத்துறை பகுதியில் தோட்டத்தில் இன்று மேய்ந்து கொண்டு இருந்த ஆடுகளை அப்பகுதியில் உள்ள வெறிநாய்கள் துரத்தி ஆடுகளை கடித்துள்ளது. அப்போது தோட்டத்தில் வேலை பார்த்த நபர்கள் கூச்சலிட்டதால் நாய்கள் ஓடியுள்ளது. ஆயினும் ஆறுமுகம் என்பவரது ஆட்டை கடித்ததால் தற்போது ஆடு நடக்க முடியாமல் உள்ளது. புகலூர் பகுதியில் வெறி நாய்களின் தொல்லை அதிகமாகி வருவதால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி