மது போதைக்கு அடிமையான நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

76பார்த்தது
வெங்கமேடு- மது போதைக்கு அடிமையான நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், வெங்கமேடு, புதுக்குளத்துபாளையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கேசவன் வயது 54.

இவர் அண்மைக்காலமாக மது போதைக்கு அடிமையாகி இருந்து வந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டின் அருகே பிப்ரவரி 13-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சையில் இருந்து வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்த அவரது உறவினர் ஜெயவேல் வயது 70 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த கேசவனின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி