கரூர்: மது போதைக்கு அடிமையானவர் தூக்கிட்டு தற்கொலை

66பார்த்தது
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை ஏமூர் பகுதியில் உள்ள கிழக்கு சீதப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (63). இவர் அண்மைக் காலமாக மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் ஜனவரி 28ஆம் தேதி மதியம் 2:15 மணி அளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். 

இதனை அறிந்த அவரது மனைவி வளர்மதி தனது கணவனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த குணசேகரன், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 3ஆம் தேதி 3 மணி அளவில் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து வளர்மதி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட வெள்ளியணை காவல்துறையினர், உயிரிழந்த குணசேகரன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி