வாங்கல் அருகே டூவீலரில் செல்லும்போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் விபத்து.
கரூர் மாவட்டம், வாங்கல், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் இளவரசன் வயது 30.
இவர் டிசம்பர் 22ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஸ்பீட் பிரேக்கரை கடந்த போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததால், தனது வாகனத்தை கட்டுப்படுத்த முயன்று, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இளவரசனுக்கு தலை, வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள நரம்பியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அறிந்த இளவரசனின் உறவினர் சக்கரவர்த்தி வயது 32 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.