டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து.

58பார்த்தது
புலியூர் அருகே டூவீலரை வேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து. வாலிபர் படுகாயம்.

கரூர் மாவட்டம், வீரணம்பட்டி, மேலபகுதி அருகே விரலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் வயது 33.

இவர் பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 10: 45 மணி அளவில், கரூர் - திருச்சி பழைய சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.


இவரது வாகனம் புலியூர், செட்டிநாடு கல்லூரி அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளங்கோவனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இச்சம்பவம் அறிந்த இளங்கோவனின் மனைவி திவ்யா வயது 23 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளங்கோவன் மீதே வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி