முன்னாள் சென்ற லாரி சிக்னல் செய்யாமல் பிரேக் அடித்ததால் சரக்கு வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், வவ்வால் தோப்பு அருகே கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் அஜித் வயது 23. சரக்கு வாகனம் ஓட்டுநர்
இவர் ஜனவரி 19ஆம் தேதி இரவு 9: 20 மணியளவில், மதுரை - சேலம் சாலையில் அவரது சரக்கு வாகனத்தை ஓட்டி சென்றார்.
இவரது வாகனம் அன்னபூர்ணா ஹோட்டல் அருகே வந்தபோது, இவருக்கு முன்னால் சென்ற அசோக் லேலண்ட் லாரி எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால், அஜித் ஓட்டி சென்ற சரக்கு வாகனம் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மார்பில் பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த அஜித்தின் தாயார் சுப்புலட்சுமி வயது 45 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த அஜித்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.