பஞ்சமாதேவி பிரிவு அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு

64பார்த்தது
பஞ்சமாதேவி பிரிவு அருகே பாம்பு கடித்து வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி சந்தன காளிபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 48. இவர் பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 7:40 மணியளவில் பஞ்சமாதேவி பாரதி பள்ளி அருகே உள்ள திருவள்ளுவர் ஜோதிட நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பாம்பு ஒன்று இவரை கடித்துள்ளது. இதனால் அலறி துடித்த ராஜாவை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜாவின் மனைவி ராஜேஸ்வரி வயது 38 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், இது தொடர்பாக உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி