காந்திகிராமம்- நடந்து சாலையை கடக்க முயன்றவர் மீது பெண் ஓட்டிய டூ வீலர் மோதி முதியவர் உயிரிழப்பு. கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது 75. இவர் மார்ச் 23ஆம் தேதி மாலை 6 மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் காந்திகிராமம் பகுதியில் நடந்து சென்றுபோது, சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, கரூர், தாந்தோணிமலை, பாரதிதாசன் நகர் 4-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் மனைவி கிரிஜா வயது 37 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற சீனிவாசன் மீது மோதி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த சீனிவாசனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். கிரிஜாவுக்கும் படுகாயம் ஏற்பட்டதால் அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சீனிவாசனின் மனைவி ஜெயமணி வயது 65 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சீனிவாசனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கிரிஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.