கார் திடீரென பிரேக் கிட்டதால், டூவீலர் மோதி விபத்து

58பார்த்தது
கரூர் மாவட்டம், சேமங்கி, முனிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சமுத்து (48). இவர் செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் - சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பண்டுதகாரன் புதூர் பகுதியில் சென்றபோது, இவருக்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் (30) என்பவர் வேகமாக ஓட்டி சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால், பிச்சமுத்துவின் டூவீலர், காரின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பிச்சமுத்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த பிச்சைமுத்துவின் மனைவி பாரதி (37) என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட வாங்கல் காவல்துறையினர், போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரதீப் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி