வெங்ககல்பட்டியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம்.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வீரணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிச்ச மணி வயது 36.
இவர் பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 9 மணி அளவில், பாளையத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் வெங்கக்கல்பட்டி மேம்பாலம் அருகே வந்த போது,
எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம்,
பிச்சமணி ஓட்டி வந்த டூவீலர் மீது மோதிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் நிற்காமல் சென்று விட்டது.
இந்த சம்பவத்தில் பிச்சை மணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஜி சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக பிச்சைமணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தின் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.