வக்புசட்டத்தை திரும்பபெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

64பார்த்தது
கரூரில் வக்பு சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கரூர் மாநகர ஐக்கிய ஜமாத் சார்பாக வக்ப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் கரூர் ஐக்கிய ஜமாத் கமிட்டி தலைவர் நிஜாம் பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் துணை தலைவர் சபியுல்லாகான், ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம் பாவா, திமுக சிறுபான்மை அமைப்பின் பொறுப்பாளர்கள்,
வி சி க மேற்கு மாவட்ட செயலாளர், தமுமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வக்ப்புவாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இந்த சட்டத்தை அமுல்படுத்திய மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி