கரூர்: டூ வீலர் மீது பெண் ஓட்டிய கார் மோதி விபத்து

59பார்த்தது
பிரேம் நகரில் டூ வீலர் மீது பெண் ஓட்டிய கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் அடுத்த காதப்பாறை, அன்பு நகர், இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது 38. இவர் டிசம்பர் 29-ம் தேதி காலை 11:30 மணி அளவில், வெங்கமேடு பகுதியில் இருந்து பிரேம் நகர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். 

இவரது வாகனம் பிரேம் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் சென்றபோது, காதப்பாறை, பேங்க் காலனி, பிரேம் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சேர்ந்த சத்திய நாராயணன் மனைவி மரியா வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், ஈஸ்வரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஈஸ்வரனுக்கு வலது கை மணிக்கட்டு, இடது கை முட்டி பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மரியா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி