தமிழகத்தில் நாளொன்றுக்கு 52 லட்சம் மகளிர் கட்டணம் இல்லா பயணம். செந்தில் பாலாஜி
கரூர் காந்திகிராமம், டபுள் டேங்க் அருகே திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கட. சியின் கரூர் தெற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, 39 ஆவது வட்டக் கழக செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கட்சியினர் பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவித்து உற்சாகப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு உரையாற்றிய செந்தில் பாலாஜி, தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 52 லட்சம் மகளிர், கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர்.
இது தமிழகத்தில் நடைபெறும் திராவிடமாடல் ஆட்சியின் சாதனை என தெரிவித்தார்.