ஆற்றுப்படுகை பணம் வைத்து சூதாடிய 2பேர் கைது. ரூ 450 பறிமுதல்

72பார்த்தது
ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூபாய் 450 பறிமுதல்.


கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது.


தகவலின் அடிப்படையில் டிசம்பர் 30-ஆம் தேதி காலை 10: 30 மணி அளவில், செட்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.


அப்போது, அப்பகுதியில் உள்ள ஆற்று படுகையில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர்
அப்பிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்
அப்பிபாளையம் குடி தெருவை சேர்ந்த மணியன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ. 450-யும் பறிமுதல் செய்தனர்.


பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி