கணவனை விட்டு பிரிந்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

79பார்த்தது
கணவனை விட்டு பிரிந்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை
வி கே டி திருமண மண்டபம் எதிரில் உள்ள வெள்ளாள கவுண்டர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் நித்தியானந்தம் மனைவி சங்கீதா வயது 29.

நித்தியானந்தம் - சங்கீதா ஆகிய இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் எழுந்த குடும்பத்தகராறில் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.

இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த சங்கீதா, டிசம்பர் 26ஆம் தேதி இரவு 7: 40 மணியளவில், தாந்தோணிமலை
வ உ சி நகர் வடக்கு பகுதியில் உள்ள அவரது தாயார் காவிரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவிரி, இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சங்கீதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சபைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி