டாஸ்மாக் கடை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே
சி. கூடலூர், தர்மகோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் வயது 30.
இவர் மார்ச் 14ஆம் தேதி இரவு 8 மணி அளவில், தென்னிலையில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் மடைக்காட்டுப்புதூர் பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடை அருகே சென்றபோது,
எதிர் திசையில் தென்னிலை, வாழநாயக்கன்பட்டி அருகே கல்லாங்காடு தோட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், முருகானந்தம் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகானந்தத்தை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் அறிந்த முருகானந்தத்தின் தந்தை தங்கவேல் வயது 65 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.