கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கட்சி துணை நிற்கும் - நன்மாறன்.

61பார்த்தது
கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கட்சி துணை நிற்கும். கரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பாராட்டு விழாவில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் பேச்சு.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பிஜேபி தலைமையிலான கூட்டணி என போட்டியிட்டாலும் நாம் தமிழர் கட்சி மட்டும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று களமாடியது.

தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் வாக்காளர்களுக்கு கையூட்டாக பணம், பரிசுப் பொருள் கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஆனால், நாம் தமிழர் கட்சி எப்போதும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி மட்டுமே அளிக்கும். பணமோ, பொருளோ அளிக்காது.

அப்படி இருந்தும் கூட தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு நேர்மையான வாக்குகள் விழுந்து குறிப்பிட்ட இடத்தையும் பிடித்துள்ளது.

இதனிடையே கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொண்ட கட்சியினருக்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான நன்மாறன் தலைமையில், கரூர்- அரவக்குறிச்சி சாலையில் உள்ள டெக்ஸ் பார்க் பகுதியில், தனியார் கூட்டரங்கில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

கணிசமான வாக்குகள் பெறுவதற்கு உறுதியாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு, நினைவு பரிசுகளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி