மனநலம் பாதித்த முதியவர் மயானம் அருகே தூக்கிட்டு தற்கொலை.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, ஆரியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 68.
இவர் கடந்த 6- மாத காலமாக, மனநலம் பாதித்து அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகாமல் விரக்த்தியுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கோடந்தூர், காளியம்மன் கோவில் அருகே உள்ள மயானம் அருகே டிசம்பர் 30ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அறிந்த வெங்கடாஜலத்தின் மகன் சக்திவேல் வயது 45 என்பவர், சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த வெங்கடாசலத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.