கரூர், வேப்பம்பாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் நிறுத்தம். அதிகாரிகள் அறிவிப்பு.
கரூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கேவிபி நகர் பாதையில் நாளை 06. 02. 25 பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பெரியார் நகர், காந்திபுரம், வையாபுரி நகர் 2வது தெரு, கே. வி. பி நகர், M. G. ரோடு, கணேசா நகர், மற்றும் விஜய நகர் ஆகிய பகுதிகளிலும்,
இதே போல 11கி. வோ. திறன் கொண்ட
வேப்பம் பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சஞ்சய் நகர் மின் பாதையில் நாளை 06. 02. 25 பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சஞ்சய் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லரபாளையம், மருத்துவ நகர், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 09. 00 மணி முதல் மாலை 05. 00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும்,
பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கி உள்ளனர் மின்வாரிய அதிகாரிகள்.