கரூர் மாவட்டம் , குப்பம் அருகே அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் பகுதியைச் சேர்ந்த 3பேர் கைது.
பங்களாதேஷ் பகுதியைச் சார்ந்த முகம்மது அலாம் சர்தார் 49, இவரது 2-வது மனைவி மோல்புல்னேசா 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி பெறாமல் பங்களாதேஷ் பகுதியில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்று, அங்கு கூலி வேலை செய்து போலியான ஆவணங்களை தயார் செய்து 7-ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம், குப்பம் கிராமத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய் நார் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
மேலும், ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
தற்போது பாஸ்போர்ட் சரி பார்ப்பதற்காக நேற்று க. பரமத்தி காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதால் முகம்மது அலாம் சர்தார்
நேரில் சென்றுள்ளார்.
உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆவணங்களை பரிசோதித்த போது, முரண்பாடாக இருந்ததால், தேங்காய் நார் கம்பெனிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
முதல் மனைவி செபாலி-யை பார்த்துவர பாஸ்போர்ட் விண்ணப்பித்ததாகவும் கூறினார். சர்தாரின் 2வது மனைவி மோல்புல்னேசன், முதல் மனைவி மகன் பலால் ஹுசைன் ஆகியோர் அவருடன் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனால், 3- பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.