ஷாப்ட் டென்னிஸ் இறுதிப் போட்டியை டிஎஸ்பி துவக்கி வைத்தார்.

68பார்த்தது
மாநில அளவிலான ஷாப்ட் டென்னிஸ் இறுதிப் போட்டியை டிஎஸ்பி துவக்கி வைத்தார்.

கரூர், காந்திகிராமம், திண்ணப்பா நகரில் தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் கான போட்டிகள் மே 1-ம் தேதி துவங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்றது.

இன்று இறுதி போட்டியை கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

போட்டியில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வெற்றி பெறும் முனைப்போடு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.

நடைபெற்ற இந்த போட்டியில் வேலூர், சேலம், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் டிஎஸ்பி செல்வராஜ்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அகாடமி மாநில முன்னாள் செயலாளர் செம்மணன் கலந்து கொண்டார். கரூர் மாவட்ட தலைவர் ரத்தினவேணி, செயலாளர் வினோத் குமார் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஹரியானாவில் நடைபெற உள்ள தேசிய அலுவலக போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி