தொகுதி வரையறை செய்வதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. கரூரில் கிருஷ்ணசாமி பேட்டி.
கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில், மூன்று சதவீத இட ஒதுக்கீடு மூலம் தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர்களின் பறிக்கப்பட்ட உரிமை மீட்பு கருத்தரங்க ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு கட்சியினரிடையே சிறப்புரையாற்றினார்.
வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரையில் நடத்த உள்ள மாநாடு தொடர்பாக தமிழக முழுவதும் கட்சியினரிடையே கருத்தரங்க கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 14 வது மாவட்டமாக கரூர் மாவட்டத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்த அவர், இந்த கூட்டத்தில், மூன்று சதவீத இட ஒதுக்கீடு மூலம் தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர்களின் பறிக்கப்பட்ட உரிமையை மீட்கவும், மாஞ்சோலை தொழிலாளர்களின் மண்உரிமையை மீட்கவும் ஆலோசனைகளை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி வரையறை செய்வதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.