கரூரில், மதுபான பார் ஊழியருக்கு கத்தி குத்து-4-பேர் மீது வழக்கு பதிவு.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது 30.
இவர் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடை பாரில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மே 8-ம் தேதி இரவு 11: 30 மணிக்கு மேல், கரூர் அடுத்த ராயனூர் பகுதியைச் சேர்ந்த புக்கராண்டி வயது 29, நடேஷ் வயது 29, திருமாநிலையூரை சேர்ந்த ரஞ்சித் வயது 30, நிவேஷ் வயது 28 ஆகியோர் இந்த மதுபான பாருக்கு சென்று பிரகாஷ் இடம் மது கேட்டுள்ளனர்.
மதுபான பார் வேலை நேரம் முடிந்ததை சுட்டிக்காட்டி, மது பாட்டில்களை தர மறுத்தார் பிரகாஷ்.
இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் பிரகாஷின் வயிற்றில் ஏற்கனவே எடுத்து வந்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.
மற்ற மூவரும் பிரகாஷை அடித்துள்ளனர்.
இதில் காயமடைந்த பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ரஞ்சித் உள்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.