டோல்கேட் அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

55பார்த்தது
டோல்கேட் அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. தாய், மகன், பேரன் படுகாயம். 

கர்நாடக மாநிலம், பெங்களூர், நாராயணபுரம், ஆகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஜா ராஜா வயது (38). இவரது மகன் தக்ஷித் வயது (07), இவரது தாயார் சூரியகுமாரி வயது (57). இவர்கள் மூவரும் அவர்களுக்கு சொந்தமான காரில் டிசம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணி அளவில், சேலம் - மதுரை சாலையில் சென்று கொண்டு இருந்தனர். 

இவர்களது வாகனம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வேலன் செட்டியூர், டோல்கேட் அருகே வந்தபோது, அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த சேலம் மாவட்டம், டேனிஷ் பேட்டை அருகே உள்ள சின்னவடகம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் வயது (35) என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம் தனுஜா ராஜா ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பேருக்கும் காயங்கள் ஏற்பட்டதால், மூவரையும் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

சம்பவம் தொடர்பாக தனுஜா ராஜா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Job Suitcase

Jobs near you