சாலையோர பலகையில் கார் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு.

6பார்த்தது
மன்மங்கலம்- காரை வேகமாக ஓட்டியதால் சாலையோர பலகையில் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு. இருவர் படுகாயம்.

சேலம் மாவட்டம் , தேவியாகுறிச்சி, தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி கவிதா வயது 45.

இவரது மகன் ஆகாஷ் வயது 28.
சேலம் ஆத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் தினேஷ் வயது 27. சேலம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் வயது 28.

இவர்கள் அனைவரும் ஒரு காரில் ஜூலை 5ஆம் தேதி மாலை 3 மணி அளவில் , கரூர் - சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
காரை செல்வகுமார் ஓட்டி சென்றார்.


இந்த கார் மன்மங்கலம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி அருகே சென்றபோது , காரை வேகமாக இயக்கியதால் சாலையோர பலகையில் மோதி விபத்து ஏற்பட்டது.


இதில் தினேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இதே விபத்தில் கவிதா மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்து கவிதா அளித்த புகாரில் வாங்கல் காவல்துறையினர் காரை அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி