விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோகைமலை மேற்கு ஒன்றியம் சார்பில் முகாம் செயற்குழு கூட்டம் கல்லடை ஊராட்சி கீழவெளியூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் இந்நிகழ்ச்சிக்கான நோக்கவுரையாற்றி ஒருங்கிணைப்பு செய்தார். மேலவெளியூர் முகாம் பொறுப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அவிநாசி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் பாலகுமார், சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் லெட்சுமணன், ஒன்றிய பொருளாளர் மகாதேவன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுப்பிரமணியன், பிரபு குமார், மலைவேல், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய துணை அமைப்பாளர் கலைவாணன், சரத்குமார், கீழவெளியூர் முகாம் நாகேஸ்வரன், சங்கப்பிள்ளை, விஜய், அஞ்சலை, தங்கப்பொண்ணு, கனகவள்ளி, சந்தியா, அருணா, கவியரசன், நிரேந்தர்ராஜ், ரவி, குமரவேல், இந்திரகுமார் மற்றும் மேலவெளியூர், கல்லடை, கீழவெளியூர் முகாம் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.