அரவக்குறிச்சி டாஸ்மாக் அருகே டூவீலரில் வேகமாக சென்றவரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நம்பகவுண்டனூர் அருகே வாய்க்காலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 45.
இவர் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6: 30 மணி அளவில், அரவக்குறிச்சியில் இருந்து ராஜபுரம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் அரவக்குறிச்சி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பாலகிருஷ்ணனுக்கு வலதுபுற தலை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் அறிந்த பாலகிருஷ்ணனின் சகோதரி ஆச்சியம்மாள் வயது 52 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை விபத்து ஏற்படும் வகையில் வேகமாக ஓட்டி காயமடைந்த பாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.