இந்திரா நகரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞன் ஹேர் டை ஆயில் குடித்து தற்கொலை.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சீட்டப்பட்டி காலனி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குரு பலன் மகன் விவேகானந்தன் வயது 25.
இவர் கடந்த 6- வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணம் அடையவில்லை.
இதனால், விரக்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்த விவேகானந்தன், ஜூலை 23ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், அவரது வீட்டில் இருந்தபோது, ஹேர்டை ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது தாயார் ராஜேஸ்வரி வயது 48 என்பவர், தனது மகனை மீட்டு, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
ஆயினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த விவேகானந்தன் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.