பால சுவற்றில் தூங்கியவர் தவறி விழுந்து விபத்து- உயிரிழப்பு.

74பார்த்தது
பால சுவற்றில் தூங்கியவர் தவறி விழுந்து விபத்து. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அத்திப்பாளையம் அருகே உள்ள வல்லக்குளத்து பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி வயது 54.


இவர் ஜூன் 1-ம் தேதி இரவு 9 மணி அளவில், நொய்யல் ஆற்று பாலசுவற்றில் படுத்து உறங்கி உள்ளார்.

அயர்ந்து உறங்கும் போது பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் காயமடைந்த அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரமூர்த்தியின் மகன் முருகேசன் வயது 29 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஈஸ்வரமூர்த்தியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி