20லட்சம்-பசுபதிபாளையம் காலணியில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி

0பார்த்தது
ரூபாய் 20 லட்சம் மதிப்பில் பசுபதிபாளையம் காலணியில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் , கரூர் மாவட்டம் , க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னம் ஊராட்சி பகுதியில் உள்ள பசுபதிபாளையம் காலணியில் 2025 -26 ஆம் ஆண்டுக்கான நமக்கு நாமே திட்டத்தில் , சமுதாய கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நேற்று நடைபெற்றது.

பூமி பூஜை முடிந்தவுடன் அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ இளங்கோ.

இந்த நிகழ்ச்சியில் க. பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி , க. பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காலனி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி