மார்த்தாண்டம்: விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
மார்த்தாண்டம்: விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் நடக்கும் குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

     ஏழை மக்களின் சொத்தை பிரித்து விற்பனை செய்ய மறுக்கும் சார் பதிவாளர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சாதகமாக ஆவணங்களை பதிவு செய்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு ஆடிட்டில் இழப்பு எனக்கூறி லட்சக்கணக்கான ரூபாய் கட்ட பொதுமக்களை நிர்ப்பந்திப்பது, கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக முறைகேடாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு படி ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

       ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் மோகன் குமார், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்த சேகர் உட்பட பலர் பேசினார்கள். கூட்டத்தில் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி