கன்னியாகுமாரி மாவட்டம்கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சபையார்குளத்தில் கடந்த 20. 04. 2024 - ம் தேதி ஆகாஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் , ஏற்கனவே 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் ஒருவர் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஷேக் சையது அலி என்ற பைசல், தில்லை நம்பி ஆகிய இருவரும் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சனோஜ் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி. மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டு கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களால் மாவட்ட கிளை சிறை நாகர்கோவிலில் அடைக்கப்பட்டார்.