குழித்துறை:  இரவில் டாரஸ் லாரி மோதி வாலிபர் சாவு

80பார்த்தது
திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் கொத்தனார்.   இன்று 7-ம் தேதி  வெளிநாட்டிற்கு செல்ல உள்ள நிலையில் நேற்று இரவு தனது இரண்டு சிறு குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கி கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.   குழித்துறை சந்திப்பு பகுதியில் வைத்து இவரது வாகனத்தின் மீது கனிம வள டாரஸ் லாரி மோதி உடல் நசுங்கி பரிதாபகரமாக உயிர் இழந்தார்.
ஊர்மக்கள் ஆத்திரமடைந்து லாரிகளுக்கு எதிராக காவல் துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். களியக்காவிளை போலீசார் முரளி உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி