இரவில் நடந்து சென்ற பெண்கள் மீது பைக் மோதல் - 3 பேர் காயம்

72பார்த்தது
அருமனை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர் களியல் மின் வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அரவிந்த் பணி முடிந்து தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அருமனை அருகே உள்ள குஞ்சாலு விளை பகுதியில் செல்லும் போது சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது அரவிந்த் ஒட்டிய பைக் மோதியது.
         இதில் பெண்கள் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அரவிந்தும் படுகாயமடைந்தார். காயமடைந்த இரண்டு பெண்களையும், அரவிந்தையும்  அந்த பகுதியினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.  

      இந்த நிலையில் இன்று (10-ம் தேதி) மதியம் விபத்து சம்மந்தமான சிசிடிவி காட்சி பதிவு சமூக வலைத் தளங்களில் வெளியானது. இதை தொடர்ந்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி