ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சோடியம் விளக்கில் மின்னொளி பாய்ச்சி மீன் பிடித்த இரு படகுகளை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பாம்பனில் இருந்து பைப்பர் கிளாஸ் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடித்தனர். இதில் சட்டத்திற்கு புறம்பாக ஜெனரேட்டர் மூலம் சோடியம் விளக்கில் கடலில் மின்னொளி பாய்ச்சி மீன் பிடித்தது இராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஜெனரேட்டர் சோடியம் விளக்கு, இரு படகுகளை மீன்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.