திருவட்டார்:. ஆதிகேசவ கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

62பார்த்தது
குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்ற 10-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக கோவில்பிரகாரம் மூழுவதும் வண்ணமலர்களால் அலங்கரிக்கபட்டிருந்தது.   தொடர்ந்து  அதிகாலை 3. 30மணிமுதல் கேரளா தமிழக பக்தர்கள் திரளாக குவித்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

       குறிப்பாக ஆலயத்தின் மேற்கு வாசலில் துவங்கி திருவட்டார் அம்மாவன்சந்திப்பு , பேருந்து நிலையம் வரை சுமார் 1கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக அழகியமண்டபம், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டுவருகிறது.   பக்தர்கள்  வருகையையொட்டி 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி