தக்கலை: கடன் வாங்கியவர்கள் திருப்பி கொடுக்காததால் பெண் தூக்கு

75பார்த்தது
தக்கலை: கடன் வாங்கியவர்கள் திருப்பி கொடுக்காததால் பெண் தூக்கு
தக்கலை அருகே உள்ள குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). இவர் டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராணி (43). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

ராணி தனது பகுதியை சேர்ந்த பல பெண்களுக்கு கடன் கொடுத்துள்ளார். பணம் வாங்கியவர்களிடம் ராணி பலமுறை பணத்தை திரும்ப கேட்டும் யாரும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 25)  மதியம் தனது வீட்டின் பின்புறத்தில் துணி காயவைக்கும் கம்பியில் ராணி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். 

இதனை பார்த்த அவரது கணவர் ஜெயக்குமார் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை கொண்டு சேர்த்தார். அங்கு ராணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி