தக்கலை அருகே புங்கறை பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி மகன் மணிகண்டன் (15) இவர் ஈத்தாமொழியில் அவரது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது விடுமுறை ஆனதால் பெற்றோர் வீட்டில் உள்ளார்.
இவர் வலிப்பு நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் செல்போன் அதிகம் பார்க்கக் கூடாது என பெற்றோர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மணிகண்டன் செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த தாயார் மகனைக் கண்டித்து அவரிடமிருந்து செல்போனைப் பறித்துள்ளார். இதனால் கோபமடைந்த மணிகண்டன் வீட்டில் மேல்மாடியில் உள்ள அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவர் உடலைக் கைப்பற்றி, தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.