கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி காட்டாத்துறையிலிருந்து வாள்வச்சகோஸ்டம் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில்செல்லும் சாலையில் 29 லட்சம் செலவில் மழை நீர் ஒடை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் வாள்வச்சகோஸ்டம் ஜான்டென்சிங் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருதூர்குறிச்சி ஊராட்சி உறுப்பினர் ஹார்பெட், ஜெயகுமார் ஜெபசிங் அருண் பெண்ஸ் , தர்மராஜ் பெர்லின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.