பத்மநாபபுரம்: மீன் வியாபாரிக்கு ரூ 67லட்சம் இழப்பீடு

68பார்த்தது
பத்மநாபபுரம்: மீன் வியாபாரிக்கு ரூ 67லட்சம் இழப்பீடு
அருவிக்கரை பகுதி தச்சூர் என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கநாடார் மகன் எபனேசர். கடந்த 2020 ஆம் வருடம் காலை 4: 00 மணிக்கு களியக்காவிளை மீன் சந்தையில் மீன் வியாபாரத்திற்காக மீன் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். களியக்காவிளை அருகே உள்ள கல்லுக்கட்டி பகுதியில் வைத்து நெய்யாற்றின் கரை பூவார் பகுதி சேர்ந்த வர்க்கீஸ் மகன் அம்பி என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியதில் எபநேசர் படுகாயம் அடைந்தார்.
      அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

      இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாகன விபத்து நஷ்ட ஈடு கோரி பத்மநாபபுரம் துணை அமர்வு நீதிமன்றத்தில் எபநேசர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சார்பு துணை அமர்வு நீதிபதி மாரியப்பன் விபத்தில் படுகாயம் அடைந்த எபனேசர் தன்னுடைய இயற்கை உபாதைகளை வெளியேற்றுவதற்கு இன்று வரை தன்னுடைய மனைவியின் துணை இல்லாமல் செய்ய இயலாத காரணத்தாலும், அவர் நிரந்தர ஊனமுற்றவராகிய காரணத்தாலும் அவருக்கு காப்பீடு நிறுவனம் 67 லட்சத்தி 44 ஆயிரத்து 949 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி