அருமனை: காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்

79பார்த்தது
அருமனை: காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்
அருமனை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் மகன் ஷிஜூ (29). தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவர் இளம் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு முதலில் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திருமணம் செய்து வைப்பதாக உறுதி கூறியிருந்தனர். 

ஆனால் காதலியின் அண்ணனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால், நேற்று முன்தினம் (ஜூன் 7) இரவு ஷிஜூ இருசக்கர வாகனத்தில் செல்லும்போது காதலியின் அண்ணன் தடுத்து நிறுத்தி பயங்கரமாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ஷிஜூ குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி