கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்மனை பகுதியை சார்ந்தவர் தருண். இவர் கடந்த 29ஆம் தேதி தன் நண்பருடன் தக்கலை அருகே மருந்துகோட்டை பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது சித்திரம் கோடு பகுதியில் வைத்து நிலை தடுமாறு கீழே விழுந்தார்.
இதில் இவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி தருண் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.