கன்னியாகுமரி மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதான திருவட்டார் ஆதிகேச பெருமாள் ஆலயத்திற்கு அருகே அமைந்து வரும் திருவட்டார் ஆஞ்சநேயர் ஆலய பணிகளை பார்வையிடவும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்மநாபசாமி திருக்கோயில் 48வது மடாதிபதி மூப்பில் புஷ்பாஞ்சலி சுவாமிகள் அகில இந்திய சன்யாசிகள் பேரவை நிறுவனத் தலைவர் ராமநாத சுவாமிகள் உட்பட 108 சன்னியாசிகள் வருகை தர இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவட்டார் ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.