நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிப்பு

51பார்த்தது
நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 63. இவர் வாரம் ஒரு முறை வடசேரி சந்தைக்கு காய்கறி வாங்க வருவது வழக்கம். இவர் வீட்டில் இருந்து பேருந்து மூலம் காய்கறி வாங்க வடசேரி சந்தைக்கு வந்த நிலையில், அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலி திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வடசேரி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி