கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் சற்குண வீதியில் குடிநீர் குழாய் இணைப்பிற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளம் மூடப்படாமல் உள்ள நிலையில் நேற்று இரவு அந்த வழியாகச் சென்ற ஒருவர் பைக்குடன் அந்தப் பள்ளத்தில் விழுந்தார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோவில் வண்டியுடன் அவர் பறந்து சென்று வீழும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.